உலகப் புகழ்பெற்ற ஓவிய-சிற்பக் கலைஞர் குமாரி நாகப்பன், இவருடைய சிற்பங்கள் சிங்கப்பூர் பொது இடங்களில் நிர்மாணிக்கப் பட்டு பேசப்பட்டவை. 40 வயதுக்கு மேல் கலைத் துறையில் தீவிரமாக ஈடுபடத் தொடங்கிய இவர், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்.
சிங்கப்பூர் 60ஆவது தேசிய நாள் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக ‘சிங்கா 60’ விழா சென்னையில் ஆகஸ்ட் 1ஆம் தேதி தொடங்கியது. இதன் ஒரு பகுதியாக அடையாறு ஃபோரம் ஆர்ட் கேலரியில் ’நகரத்துச் சிந்தனைகள்’ என்கிற தலைப்பில் ஓவிய-சிற்பக் காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.