
பாட்னா: “பிஹாரில் நவம்பர் 14 ஆம் தேதி ஒரு புதிய அரசாங்கம் அமைக்கப்படும். புதிய அரசாங்கத்தை அமைக்க மாற்றத்தை கொண்டு வாருங்கள்” என மகா கூட்டணியின் முதல்வர் வேட்பாளரும், ஆர்ஜேடி தலைவருமான தேஜஸ்வி யாதவ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பிஹார் சட்டப்பேரவையில் மொத்தம் உள்ள 243 தொகுதிகளில் 121 தொகுதிகளில் இன்று முதல்கட்ட தேர்தல் நடைபெறுகிறது. மகா கூட்டணியின் முதல்வர் வேட்பாளரான தேஜஸ்வி யாதவ், இன்று தேர்தல் நடைபெறும் ரகோபூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.

