சென்னை: நாகையில் 600 பேர் பணியாற்றும் வகையில் புதிய டைடல் பூங்கா அமைக்கப்படும் என அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா அறிவித்துள்ளார். மேலும் சட்டப்பேரவையில் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா வெளியிட்டுள்ள அறிவிப்புகள்;
“கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் 450 ஏக்கர் பரப்பளவில் புதிய சிப்காட் பூங்கா. வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் மேலும் புதிய சிப்காட் பூங்கா. தென்காசி, சிவகங்கை மாவட்டங்களில் புதிய சிப்காட் பூங்கா மற்றும் திருவாரூர், ராமநாதபுரத்தில் ஜவுளி பூங்கா அமைக்கப்படும். தஞ்சை மாவட்டத்தில் கடல்சார் உணவு ஏற்றுமதி பூங்கா அமைக்கப்படும். திருப்பத்தூர் மாவட்டத்தில் பெண்களுக்கு அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கும் விதமாக தோல் அல்லாத காலணி உற்பத்தி பூங்கா 125 ஏக்கர் பரப்பளவில் உருவாக்கப்படும்” என அறிவித்துள்ளார்.
The post நாகையில் 600 பேர் பணியாற்றும் வகையில் புதிய டைடல் பூங்கா அமைக்கப்படும்: அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா appeared first on Dinakaran.