நாக்பூர்: நாக்பூர் கலவரத்தில் ஏற்பட்ட சேதங்களுக்கு வன்முறையாளர்களிடம் இருந்து இழப்பீடு வசூலிக்கப்படும் என்று மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் கூறினார்.
மகாராஷ்டிராவில் அவுரங்சீப் கல்லறை தொடர்பாக இந்துத்துவா அமைப்பினர் கடந்த திங்கட்கிழமை நாக்பூரில் போராட்டம் நடத்தினர். அப்போது மத நூல் எரிக்கப்பட்டதாக வதந்தி பரவியதை தொடர்ந்து இரு சமூகத்தினர் இடையே கலவரம் வெடித்தது. இதில் வாகனங்கள் தீவைத்து எரிக்கப்பட்டன. சொத்துகள் சேதப்படுத்தப்பட்டன.