நாக்பூர்: மகாராஷ்டிராவின் மத்திய நாக்பூரில் வன்முறை நடந்து ஆறு நாட்களுக்குப் பின்பு மீதமுள்ள நான்கு இடங்களில் இருந்தும் ஊரடங்கு இன்று திரும்பப் பெறபட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மகாராஷ்டிராவின் சத்ரபதி சம்பாஜி நகர் மாவட்டத்தில் உள்ள முகலாய மன்னர் அவுரங்கசீப் கல்லறையை அகற்ற வேண்டும் எனக்கோரி விஹெச்பி மற்றும் பஜ்ரங் தளம் தலைமையில் வலதுசாரி அமைப்புகள் மார்ச் 17ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தின. இந்த ஆர்ப்பாட்டத்தில் புனித எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட சதார் எரிக்கப்பட்டதாக வதந்தி பரவியது. இதனைத் தொடர்ந்து மத்திய நாக்பூர் பகுதிகளில் அன்று இரவு வன்முறை ஏற்பட்டது.