ஹைதராபாத்: நடப்பு ஐபிஎல் சீசனின் இரண்டாவது லீக் போட்டியில் 44 ரன்களில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தியது சன்ரைசர்ஸ் ஹைதராபாத். இந்த நிலையில் ஆட்டத்துக்கு பிறகு தங்கள் அணி இன்னும் சிறப்பாக செயல்பட்டு இருக்கலாம் என ராஜஸ்தான் அணியின் மாற்று கேப்டன் ரியான் பராக் தெரிவித்தார்.
இந்தப் போட்டியில் 287 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விரட்டியது. சஞ்சு சாம்சன் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இணைந்து இன்னிங்ஸை ஓபன் செய்தனர். ஜெய்ஸ்வால் ஒரு ரன் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். ரியான் பராக், நிதிஷ் ராணா ஆகியோரும் விரைந்து விக்கெட்டை இழந்தனர்.