ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த செவ்வாய்க்கிழமை தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட 26 பேரில் ஆந்திராவை சேர்ந்த ஓய்வுபெற்ற வங்கி ஊழியர் ஜே.சி.சந்திரமவுலியும் ஒருவர். அவருடன் சென்ற நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் நூலிழையில் உயிர்தப்பினர். உயிர்தப்பிய விதம் குறித்து நண்பர் சசீதர் கூறியதாவது:
எனது நண்பர் சந்திரமவுலிக்கு கடந்த 18-ம் தேதி 70 வயதானது. எனவே பிறந்த நாள் பயணமாக எங்களை பஹல்காம் அழைத்துச் சென்றார். மொத்தம் 3 தம்பதியருக்கான ஒட்டுமொத்த பயணத்தையும் அவர்தான் திட்டமிட்டிருந்தார்.