மும்பை: செபி மீதான நம்பிக்கையை நாங்கள் தொடர்ந்து பாதுகாப்போம் என்று அதன் தலைவராக பொறுப்பேற்ற துஹின் காந்தா பாண்டே தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் மூலதன சந்தைகளை மேற்பார்வையிடுவதற்கான மத்திய அமைப்பான செபி-யின் தலைவராக துஹின் காந்தா பாண்டே இன்று (மார்ச் 1) பொறுப்பேற்றார். முன்னதாக, மும்பையில் உள்ள செபி தலைமையகத்துக்கு வந்த அவருக்கு அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. செபி நிர்வாகிகளின் வரவேற்புடன் துஹின் காந்தா பாண்டே அதன் தலைவராக பொறுப்பேற்றார்.