நாசிக்: நாசிக் நகரிலுள்ள தர்கா இடிக்கப்பட்டபோது நடந்த வன்முறைச் சம்பவத்தில் 21 போலீஸார் காயமடைந்தனர். மகாராஷ்டிர மாநிலம் நாசிக் நகரின் காத்தேகள்ளி பகுதியில் சட்டவிரோதமான முறையில் சத்பீர் தர்கா என்ற பெயரில் தர்கா உள்ளது. இதையடுத்து அந்த தர்காவை இடித்து அகற்ற நாசிக் நகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டது. இதற்கு எதிராக மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. ஆனால், தர்காவை இடித்து அகற்றலாம் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு தர்காவை இடிக்க நாசிக் நகராட்சி அதிகாரிகளும், ஊழியர்களும் வந்தனர். இதையடுத்து அங்கு திரண்ட ஒரு கும்பலைச் சேர்ந்தவர்கள், தர்காவை இடிக்க எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து போலீஸார் அங்கு குவிக்கப்பட்டனர். இதனால் ஆத்திரமடைந்த கும்பல் போலீஸார் மீது கல்வீசி தாக்குதல் நடத்த முயன்றனர்.