புதுடெல்லி: அம்பேத்கரின் 135வது ஜெயந்தி விழாக் கொண்டாட்டங்கள் நாடாளுமன்ற புல்வெளியில் உள்ள பிரேர்னா ஸ்தல்-லில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், இதில் குடியரசுத் தலைவர், குடியரசு துணை தலைவர், பிரதமர் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளதாகவும் அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை: அம்பேத்கரின் 135-வது ஜெயந்தி விழாக் கொண்டாட்டங்கள் ஏப்ரல் 14 அன்று புதுடெல்லியில் உள்ள நாடாளுமன்ற புல்வெளியில் உள்ள பிரேர்னா ஸ்தல்-லில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்திய அரசியலமைப்பின் தந்தையாகப் போற்றப்படும் பாபாசாகேப் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் பிறந்த நாளை நினைவுகூரும் இந்த நிகழ்ச்சிக்கு மத்திய சமூக நீதி, அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் சார்பில் டாக்டர் அம்பேத்கர் அறக்கட்டளை ஏற்பாடு செய்துள்ளது.