இந்திய அரசியல் வானில் ஜனநாயக சுடரொளியாக ஜொலித்த கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத்தின் 130-வது பிறந்த நாள் இன்று. அப்போதைய சென்னை மாகாணம் திருநெல்வேலி பேட்டையைச் சேர்ந்த மியாகான் ராவுத்தர் – முகைதீன் ஃபாத்திமா தம்பதியினரின் மகனாக 5-6-1896-ல் பிறந்தார்.
வழிகாட்டும் தலைவர்: காயிதே மில்லத் என்ற அரபுச் சொல்லுக்கு பொருள், வழிகாட்டும் தலைவர் என்பதாகும். பெற்றோரின் தீர்க்க தரிசனத்தின்படி இந்திய நாட்டின் மதிப்பு மிக்கத் தலைவராக உயர்ந்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியை வழிநடத்தும் மாபெரும் தலைவராக காயிதே மில்லத் திகழ்ந்தார்.