விராட் கோலி ஓய்வு பெற்றது குறித்து ரவி சாஸ்திரி கருத்துக் கூறிய போது, முடிவு எடுக்கும் அதிகாரத்தில் நான் இருந்திருந்தால், ஆஸ்திரேலியா தொடருக்குப் பிறகே விராட் கோலியிடம் கேப்டன்சியிடம் கொடுத்திருப்பேன் என்று கூறியுள்ளார்.
ரோஹித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவித்த பிறகு விராட் கோலியிடம் கேப்டன்சி அளித்திருக்க வேண்டும் என்று பலரும் அபிப்ராயப் பட்டனர். விராட் கோலியும் இங்கிலாந்து தொடரில் தன்னிடம் கேப்டன்சி கொடுத்தால் டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடரலாம் என்று நினைத்திருந்ததாகவே செய்திகள் வெளியாகின. ஆனால் அப்படித் திட்டம் எதுவும் இல்லாததால், கம்பீருடன் சேர்ந்து பணியாற்ற கோலிக்கும் மனதில்லை என்பதால் கோலி ஓய்வு அறிவித்துவிட்டார் என்றே தெரிகிறது.