சென்னை: நான் விரும்பும் வரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக என்னால் தொடர்ந்து விளையாட முடியும் என மகேந்திர சிங் தோனி தெரிவித்துள்ளார். அவரது ஓய்வு குறித்த பேச்சு வைரலாகி உள்ள நிலையில் ஜியோஹாட்ஸ்டார் நேர்காணலில் இதை தோனி கூறியுள்ளார்.
தான் வீல் சேரில் இருந்தாலும், சிஎஸ்கே அணி தன்னை விளையாட களத்துக்கு இழுத்து வந்துவிடும் என்று வேடிக்கையாக தோனி பேசியுள்ளார். 43 வயதான அவர் கடந்த ஐபிஎல் சீசன் முதல் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேனாக அணியில் விளையாடி வருகிறார். ஆட்டத்தின் கடைசி சில ஓவர்களில் பேட் செய்ய களம் கண்டு, சிக்ஸர் விளாசுவது அவரது ஆட்ட பாணியாக உள்ளது.