புதுடெல்லி: மனித உழைப்பை மலிவாக்கும் வகையில் நாம் உணவு ஆப்களை உருவாக்குகிறோம். அதேநேரம், சீனர்கள் செயற்கை நுண்ணறிவு (ஏஐ), மின்சார வாகனம் (இவி) போன்றவற்றின் உருவாக்கத்தில் கவனம் செலுத்துகின்றனர் என்று மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.
டெல்லியில் நேற்று நடைபெற்ற ஸ்டார்ட்அப் மகா கும்பமேளா நிகழ்ச்சியில் பங்கேற்ற கோயல் இதுகுறித்து மேலும் கூறியதாவது: இந்திய ஸ்டார்ட்அப்கள் “உணவு டெலிவரி ஆப்ஸ், பேன்சிஐஸ்கிரீம் & குக்கீஸ், உடனடி மளிகை டெலிவரி, பந்தயம் & பேன்டஸி ஸ்போர்ட்ஸ் ஆப்ஸ் மற்றும் ரீஸ்ஸ் & இன்ப்ளூயன்சர் பொருளாதாரத்தை உருவாக்குவதில் மும்முரமாக உள்ளோம். ஆனால், மறுபுறம் சீனர்கள், இவி, பேட்டரி தொழில்நுட்பம், செமிகண்டக்டர், ஏஐ, ரோபாட்டிக்ஸ்,ஆட்டோமேஷன், உலகளாவிய தளவாடங்கள், வர்த்தகம், டீப் டெக் & உள்கட்டமைப்புகளில் கவனம் செலுத்துகின்றனர்.