புதுச்சேரி: புதுச்சேரி சட்டசபை கூட்டத்தொடர் நாளை(10ம் தேதி) கவர்னர் உரையுடன் துவங்குகிறது. 12ம் ேததி முதல்வர் ரங்கசாமி பட்ஜெட் தாக்கல் செய்கிறார். 15வது புதுச்சேரி சட்டப்பேரவையின் 5வது கூட்டத்தொடர் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 31ம் தேதி கூட்டப்பட்டு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. துணை நிலை ஆளுநர் உரையுடன் துவங்கிய இக் கூட்டம் 11 நாட்கள் நடைபெற்றது. தொடர்ந்து பிப்ரவரி மாதம் 12ம் தேதி சட்டசபை மீண்டும் கூட்டப்பட்டு ரூ.700.25 கோடிக்கு கூடுதல் செலவினங்களுக்கு அனுமதி பெறப்பட்டது.
அத்துடன் சட்டசபை காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டது. இதற்கிடையே 15வது சட்டப்பேரவையின் ஆறாவது கூட்டத்தொடர் நாளை( 10ம் தேதி) காலை 9.30 மணிக்கு துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் உரையுடன் துவங்குகிறது.11ம் தேதி ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது எம்எல்ஏக்கள் பேசுகின்றனர்.12ம் தேதி 2025-2026ம் ஆண்டுக்கான பட்ஜெட்டினை நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதல்வர் ரங்கசாமி தாக்கல் செய்கிறார்.
The post நாளை புதுச்சேரி சட்டசபை கூட்டத்தொடர் துவங்குகிறது: 12ம் தேதி பட்ஜெட் தாக்கல் appeared first on Dinakaran.