மும்பை: காசோலைகளை ஒரே நாளில் கிளியர் செய்வதற்கான நடைமுறை அக்.4 முதல் வங்கிகள் அமல்படுத்தப்பட உள்ளன. இதற்கான வழிகாட்டுதல்களை ரிசர்வ் வங்கி வழங்கி உள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கியின் புதிய வழிகாட்டுதல்களின்படி, அக்.4 முதல் அனைத்து வங்கிகளும் காசோலைகளை ஒரே நாளில் கிளியர் செய்ய வேண்டும். இது, காசோலைகள் மூலம் பணம் செலுத்துவதை விரைவானதாகவும், எளிதானதாகவும் மாற்றும். தற்போது காசோலைகள் கிளியர் ஆக இரண்டு நாட்கள் வரை ஆகிறது.