சென்னை: தொடர் விடுமுறையை முன்னிட்டு, ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
நாளை முதல் சுதந்திர தினம், கிருஷ்ண ஜெயந்தி என அடுத்தடுத்து 3 நாட்கள் தொடர் விடுமுறை வருகிறது. இதனால் பல்வேறு பகுதிகளில் வசிப்போர், சொந்த ஊர்களுக்கு பயணிக்கத் திட்டமிட்டுள்ளனர். ரயிலில் முன்பதிவு மற்றும் தட்கலில் பயணச்சீட்டு கிடைக்காத நிலையில், பொதுமக்கள் அரசுப் பேருந்துகளை நாடுகின்றனர். குறிப்பாக, சென்னையில் இருந்து தொலைதூர ஊர்களுக்குச் செல்லும் பயணிகள், படுக்கை வசதி கொண்ட பேருந்துகளையே பெரிதும் விரும்புகின்றனர்.