சென்னை: நடப்பு ஆகஸ்ட் மாதத்தின் முதல் 15 நாட்களில் ரஷ்யாவில் இருந்து இந்தியாவின் எண்ணெய் கொள்முதல் நாளொன்றுக்கு 2 மில்லியன் பீப்பாய்களாக உயர்ந்துள்ளது. எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் தங்களது கொள்முதல் சார்ந்த விவகாரத்தில் பொருளாதார ரீதியான முன்னுரிமையை தொடர்ந்து அளித்து வருவது இதற்கு காரணம் என தெரியவந்துள்ளது.
ஆகஸ்ட் (2025) மாதத்தின் முதல் பாதியில் நாளொன்றுக்கு சுமார் 5.2 பில்லியன் பீப்பாய் என்ற அளவில் இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதி இருந்துள்ளது. இதில் சுமார் 38 சதவீதம் ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டவை. இதை நிகழ் நேரத்தில் உலகளாவிய தகவலை வழங்கும் Kpler எனும் பகுப்பாய்வு தரவு நிறுவனம் வழங்கியுள்ளது.