
பாட்னா: இந்த முறை 80 தொகுதிகளில் ஜேடியு வெற்றி பெறும் என்று தேர்தலுக்கு முன்பே சொல்லப்பட்டது. நிதிஷ் குமாரின் வசீகரமான தலைமையே இதற்குக் காரணம் என்று ஜேடியு மூத்த தலைவர் கே.சி. தியாகி தெரிவித்துள்ளார்.
காலை 11.30 மணி நிலவரப்படி பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 85 தொகுதிகளிலும், ஜேடியு 75 தொகுதிகளிலும் முன்னிலை வகித்து வருகின்றன. ஆர்ஜேடி 36 தொகுதிகளிலும் காங்கிரஸ் 7 தொகுதிகளிலும் முன்னிலை வகித்து வருகின்றன. தேசிய ஜனநாயகக் கூட்டணி இரண்டில் மூன்று பங்கு வெற்றியுடன் முன்னிலை வகித்து வருகிறது. இதன்மூலம், பிஹாரில் தேசிய ஜனநாயகக் கூட்டணி மீண்டும் ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்பு உருவாகி உள்ளது.

