ரோம்: போப் பிரான்சிஸ் கடந்த 14ம் தேதி முதல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு நிமோனியா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அவருக்கு செப்சிஸ் பாதிக்கும் அபாயம் இருப்பதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். இது நிமோனியாவினால் ரத்தத்தில் ஏற்படும் கடுமையான தொற்று என மருத்துவர்கள் தெரிவித்துள்ளது. இது வரை போப்பிற்கு செப்சிஸ் தொற்றுக்கான எந்த ஆதாரமும் இல்லை.
அதே நேரத்தில் அவரது சுவாசப்பிரச்னை மற்றும் அவரது வயதை கருத்தில் கொண்டால் செப்சிஸில் இருந்து மீண்டு வருவது மிகவும் கடினமாகும் என மருத்துவ குழுவினர் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அவர் மேலும் ஒரு வாரம் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று போப் பிரான்சிஸ் எடுத்துக்கொள்ளும் மருந்துகளை அவரது உடல் ஏற்றுக்கொண்டுள்ளது. எனினும் அவர் இன்னும் ஆபத்தில் இருந்து மீளவில்லை. இதற்கிடையே போப் இல்லாமல் வாடிகனின் புதிய ஆண்டு பிரார்த்தனையை இந்த ஆண்டு தொடங்கப் பட்டுள்ளது.
The post நிமோனியாவால் பாதிப்பு மேலும் ஒரு வாரம் போப்புக்கு சிகிச்சை appeared first on Dinakaran.