நிலவின் மேற்பரப்பில் உள்ள மண்ணை பூமிக்கு கொண்டு வந்து ஆய்வு செய்வதற்காக 2027-ம் ஆண்டு சந்திரயான்-4 விண்கலம் அனுப்பப்படும் என மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.
இஸ்ரோவின் எதிர்கால திட்டங்கள் குறித்து அமைச்சர் ஜிதேந்திர சிங் அளித்த பேட்டியில் கூறியதாவது: சந்திரயான்-4 விண்கலம் 2027-ம் ஆண்டு அனுப்பப்படவுள்ளது. இந்த விண்கலம் எல்விஎம்-3 ராக்கெட் மூலம் அனுப்பப்படும். விண்கலத்தின் 5 முக்கிய பாகங்கள் 2 ராக்கெட்டுகளில் தனித்தனியாக விண்ணுக்கு அனுப்பப்பட்டு ஒன்று சேர்க்கப்படும். அதன்பின் இந்த விண்கலம் நிலவுக்கு செல்லும். நிலவில் மேற்பரப்பில் இருந்து பாறைத் துகள்கள் பூமி எடுத்துவரப்பட்டு ஆய்வு செய்யப்படும்.