கொல்கத்தா: நீச்சல் வீராங்கனையின் வீட்டில் இருந்து அவரது பத்மஸ்ரீ விருது உள்ளிட்ட பொருட்கள் திருடப்பட்டன.
மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த நீச்சல் வீராங்கனை புலா சவுத்ரி. இவர் 5 கண்டங்களில் உள்ள 7 கடல்களையும் நீந்தி கடந்தவர் என்ற பெருமையையும், பல்வேறு தேசிய சாதனைகளையும் படைத்தவர். இவரது சாதனைகளை பாராட்டி, மத்திய அரசு இவருக்கு அர்ஜுனா விருது, பத்மஸ்ரீ விருது ஆகியவற்றை வழங்கி கவுரவித்துள்ளது. 2006 முதல் 2011-ம் ஆண்டு வரை மேற்கு வங்க மாநிலம், நந்தப்பூர் எம்எல்ஏவாகவும் அவர் இருந்துள்ளார்.