டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் தீவிபத்து நடந்தபோது, தீயை அணைக்கச் சென்ற வீரர்கள் கட்டுக்கட்டாக பணம் எரிந்து கொண்டிருப்பதை பார்த்து வீடியோ எடுத்து தலைமை நீதிபதியின் கவனத்துக்கு கொண்டு சென்றனர். இச்சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியதுடன், நீதிபதிகளின் சொத்துகள் குறித்து பொதுமக்கள் விவாதிக்கும் நிலையை ஏற்படுத்தியது.
உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் சொத்து விவரங்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பொதுமக்கள் பார்வைக்காக வெளியிடப்படுகிறது. ஆனால், உச்ச நீதிமன்றம் மற்றும் 25 உயர் நீதிமன்றங்களில் பணியாற்றும் 769 நீதிபதிகளில் 95 பேர் மட்டுமே தங்கள் சொத்து விவரங்களை இணைய தளத்தில் வெளியிட்டிருப்பதாக தெரிகிறது. மொத்த எண்ணிக்கையில் இது வெறும் 12.35 சதவீதம் மட்டுமே!