புதுடெல்லி: டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மாவை, அலகாபாத் உயர் நீதிமன்றத்திற்கு மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அலகாபாத் உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் இன்று (மார்ச் 25) காலவரையற்ற வேலைநிறுத்தத்தைத் தொடங்கியது.
அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் 3வது வாயிலில் கூடி வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்துக்கு தலைமை தாங்கிய வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் அனில் திவாரி, பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், “இந்தப் போராட்டம் எந்த நீதிமன்றத்துக்கும் அல்லது நீதிபதிக்கும் எதிரானது அல்ல. ஆனால், நீதித்துறை அமைப்புக்கு களங்கம் விளைவித்தவர்களுக்கு எதிரானது.