புதுடெல்லி: காசோலை மோசடி வழக்கில் தண்டிக்கப்பட்டதால் ஆத்திரமடைந்த குற்றவாளியும் அவரது வழக்கறிஞரும் பெண் நீதிபதிக்கு மிரட்டல் விடுத்த சம்பவம் டெல்லியில் அரங்கேறியுள்ளது.
டெல்லி துவாரகா நீதிமன்றத்தில் 6 ஆண்டு கால காசோலை மோசடி வழக்கு ஒன்றில் குற்றவியல் நடுவர் ஷிவாங்கி மங்களா கடந்த 2-ம் தேதி தீர்ப்பு அளித்தார். அதில் அவர், குற்றம் சாட்டப்பட்டப்பட்ட ஓய்வுபெற்ற ஆசிரியரை குற்றவாளி என அறிவித்தார்.