உதகை: நீலகிரி மாவட்டத்தில் மருத்துவத்துறையில் காலி பணியிடங்களே இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
ஏப்ரல் 6ம் தேதி உதகையில் நடைபெறும் நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று நீலகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையை திறந்து வைக்கவுள்ளார். இந்நிலையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று உதகையில் கட்டப்பட்டுள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துமவனை கட்டிடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.