சாலையோரம் உள்ள புற்களில் தீ வைப்பதால், நிழல் தருவதற்காக நடவு செய்யப்பட்ட மரங்கள் கருகி வருகின்றன. இதை தடுக்க நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர். மத்திய, மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் உள்ள சாலைகளின் வழியாக தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் பயணிக்கின்றன.
சாலையில் செல்லும் வாகனங்களில் இருந்து வெளியேறும் புகையினால் காற்று மாசடைந்து புதிய நோய்களுக்கு காரணியாகிறது. இதனை போக்கவும், சுகாதாரமான காற்று கிடைக்கவும், வெப்பத்தை தணித்து சுகமான பயணம் மேற்கொள்ளவும் சாலையின் இருபுறமும் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கப்படுகின்றன.