புதுடெல்லி: உடான் திட்டத்தின் கீழ் பணிகள் நிறைவுபெற்றது. நெய்வேலி, வேலூருக்கு விரைவில் விமான சேவை தொடங்கும் என்று மத்திய இணையமைச்சர் முரளிதர் மொஹல் தெரிவித்துள்ளார். மாநிலங்களவையில் திமுக எம்.பி கனிமொழி என்.வி.என்.சோமு எழுப்பிய கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.
மாநிலங்களுக்குள்ளாக மண்டலங்களை விமான சேவை மூலம் இணைக்க வகை செய்யும் உடான் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் தேர்வு செய்யப்பட்டுள்ள விமான நிலையங்கள் எவை? அதற்கான ஏற்பாடுகள் எந்த நிலையில் உள்ளன? எப்போது அவை பயன்பாட்டுக்கு வரும் என்று மாநிலங்களவையில் திமுக எம்.பி. கனிமொழி என்.வி.என்.சோமு கேள்வி எழுப்பி இருந்தார்.