தஞ்சாவூர்: காவிரி டெல்டாவில் தற்போது குறுவை, சம்பா சாகுபடிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. குறுவை பருவத்தில் 5.66 லட்சம் ஏக்கரில் நடவுபு் பணிகள் முடிவடைந்துள்ளன. இதேபோல, சம்பா பருவத்துக்கு 9.70 லட்சம் ஏக்கர் திட்டமிட்டு நாற்றங்கால் தயாரிப்பும், நடவும் ஆங்காங்கே செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், நெற்பயிருக்கு தேவையான உரங்களை இலைவழியாக வழங்கவும், பூச்சிக்கொல்லி மருந்துகளை தெளிக்கவும் தற்போது ட்ரோன்களை வாடகைக்கு எடுத்து விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனர்.