சென்னை: தமிழகத்தில் 10 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. திருநெல்வேலி டிஐஜி பா.மூர்த்தி, ராமநாதபுரம் டிஐஜியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ராமநாதபுரம் டிஐஜி அபிநவ் குமார், மதுரை டிஐஜியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். திருநெல்வேலி டிஐஜி பா.மூர்த்தி, ராமநாதபுரம் டிஐஜியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். திருநெல்வேலி ஆணையர் சந்தோஷ் ஹதிமானிக்கு திருநெல்வேலி டிஐஜி-யாக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. வண்ணாரப்பேட்டை இணை ஆணையர் ஆர்.சக்திவேல் உளவுத்துறை- பிரிவு -1 இணை ஆணையராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.