தஞ்சாவூர்: பட்டுக்கோட்டையில் 45 ஆண்டுகளாக குப்பை மேடாக மாறி போன நகராட்சி ஏரியை, தன்னார்வலர்கள் தூர் வாரி 1.48 லட்சம் டன் குப்பையை அகற்றி புத்துயிர் அளித்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை நகராட்சியின் நீர் ஆதாரமாக 6 ஏக்கர் பரப்பளவு கொண்ட பிக்காச்சியப்பா ஏரி விளங்கியது. கடந்த 45 ஆண்டுகளாக நகராட்சியும், பொதுமக்களும், ஏரியில் குப்பை, கழிவுநீரை கொட்டி குப்பை மேடாக மாற்றினர்.
இதனால் அந்த பகுதியே துர்நாற்றம் வீசியது. சுமார் 15 அடி உயரத்துக்கு குப்பை தேங்கி மலைபோல காட்சியளித்தது. இதனால் அந்த பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டதையடுத்து, இந்த ஏரியை மீட்க வேண்டும் என அப்பகுதி இளைஞர்கள், தன்னார்வலர்கள் முடிவு செய்தனர்.