பரேலி: புனித ரமலான் மாத நோன்பினை நோற்காமல் இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமி பாவம் செய்துள்ளார் என அகில இந்திய முஸ்லிம் ஜமாத்தின் தேசியத் தலைவரான மவுலானா சஹாபுத்தீன் ரஸ்வி பரேல்வி கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், “ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பது ஒவ்வொரு இஸ்லாமியரின் முக்கிய கடமை ஆகும். இது ஷரியத் விதியின்படி இஸ்லாமியர்கள் அவசியம் பின்பற்ற வேண்டி உள்ளது. ஒருவர் வேண்டுமென்றே நோன்பு நோற்காமல் இருந்தால் அவர் பாவியாகக் கருதப்படுவார். அந்த வகையில் நோன்பு நோற்காத இந்திய கிரிக்கெட் வீரர் ஷமி பாவி ஆகியுள்ளார். அவர் இதை செய்திருக்க கூடாது.