புதுடெல்லி: நோய்த் தடுப்பு, குணப்படுத்துதல், மறுவாழ்வு அளிக்கும் சுகாதாரப் பராமரிப்பை வழங்குவது ஆகியவற்றில் மத்திய அரசு கவனம் செலுத்துகிறது என்று மத்திய சுகாதார அமைச்சர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார்.
புதுடெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில், சுகாதார தொழில்நுட்ப மதிப்பீடு தொடர்பான சர்வதேசக் கருத்தரங்கை ஜே.பி. நட்டா இன்று (சனிக்கிழமை) தொடங்கி வைத்தார். உலக சுகாதார அமைப்பு (WHO), உலகளாவிய மேம்பாட்டு மையம் (CGD) ஆகியவற்றுடன் இணைந்து, சுகாதாரம், குடும்ப நல அமைச்சகத்தின் சுகாதார ஆராய்ச்சித் துறை (DHR) சார்பில் இக்கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டது.