மொஹாலி: இருசக்கர வாகனம் நிறுத்துவதில் உண்டான பிரச்சினையில் ஏற்பட்ட மோதலில் பக்கத்து வீட்டுக்காரர் தள்ளியதில் கீழே விழுந்து, இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆய்வாளர் ஒருவர் உயிரிழந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.
இந்தத் துயரச் சம்பவம் செவ்வாய்க்கிழமை நடந்துள்ளது. ஐஐஎஸ்இஆர்-ல் ஆராய்ச்சியாளராக இருந்த அபிஷேக் ஸ்வர்ன்கர் (39), தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திய போது அவர் அங்கு வாகனத்தை நிறுத்த அவரின் அண்டை வீட்டில் வசிக்கும் மோன்டி என்பவர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, பின்பு மோதலாக மாறியுள்ளதாக கூறப்படுகிறது.