கோவை: சர்வதேச சந்தை விலையை விட இந்தியாவில் பருத்தி, விஸ்கோஸ், பாலியஸ்டர் உள்ளிட்ட மூலப் பொருட்கள் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது என, ஜவுளித் தொழில்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து மறுசுழற்சி ஜவுளித்தொழில் கூட்டமைப்பின் தலைவர் ஜெயபால், தமிழ்நாடு ஓபன் எண்ட் நூற்பாலைகள் சங்க தலைவர் அருள்மொழி ஆகியோர் கூறியது: பருத்தி, விஸ்கோஸ், பாலியஸ்டர் ஆகியவற்றை முக்கிய மூலப்பொருட்களாக கொண்டு செயல்படும் இந்திய ஜவுளித் தொழில் அவற்றின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.