அகமதாபாத்: கடந்த செப்டம்பரில் கார் விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார் இந்தியாவை சேர்ந்த கிரிக்கெட் வீரர் முஷீர் கான். தற்போது காயத்தில் இருந்து மீண்டு கிரிக்கெட் களத்துக்கு திரும்பி உள்ளார். நடப்பு ஐபிஎல் சீசனில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக அவர் விளையாட உள்ளார். இந்நிலையில், தனது மீட்சியை ‘மறுவாழ்வு’ என குறிப்பிட்டு பேசியுள்ளார்.
20 வயதான அவர் உள்ளூர் கிரிக்கெட்டில் மும்பை அணிக்காக விளையாடி வருகிறார். விபத்து காரணமாக உள்ளூர் கிரிக்கெட் தொடரில் அவரால் கடந்த ஆறு மாதங்கள் விளையாட முடியவில்லை. இரானி கோப்பை தொடரில் விளையாட சென்ற போதுதான் அவருக்கு விபத்து ஏற்பட்டது. கடந்த 2024-ல் இளையோர் 19 உலகக் கோப்பை தொடரில் இந்தியாவுக்காக விளையாடி இருந்தார்.