புதுடெல்லி: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையில் திருவள்ளுவரின் திருக்குறள் ஒன்றையும், தெலுங்கு கவிஞர் குருஜாதா அப்பாராவின் மேற்கோள் ஒன்றினையும் சுட்டிக்காட்டினார்.
தொடர்ந்து 8-வது முறையாக மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தனது பட்ஜெட் உரைகளில் கவிஞர்கள், தத்துவவாதிகள், செவ்வியல் இலக்கியங்களில் இருந்து மேற்கோள்களைக் காட்டுவதை தனித்துவமான வழக்கமாக வைத்துள்ளார். இந்த நிதியாண்டு (2025-26) பட்ஜெட்டும் அதற்கு விதிவிலக்கு இல்லை. மத்திய நிதியமைச்சர் தாக்கல் செய்த பட்ஜெட் உரையில், தனது நேரடி வரி விதிப்புகள் பற்றிக் குறிப்பிடும்போது திருக்குறளை மேற்கோள் காட்டினார். ஆட்சியாளர்களிடமிருந்து மக்கள் நல்லாட்சியை எதிர்பார்க்கிறார்கள் என்பதனை வலியுறுத்த, திருக்குறளின் சொங்கோன்மை என்னும் அதிகாரத்திலிருந்து 542-வது குறளை மேற்கோள்காட்டினார். வள்ளுவரின் வாய்மொழியில்,