சென்னை: பட்டாசு ஆலைகளில் விதிமீறல் கண்டுபிடிக்கப்பட்டால் அதை சரி செய்ய கால அவகாசம் கொடுக்க வேண்டும். மேலும் விதி மீறலுக்கு தண்டனைத்தொகையும் விதிக்கலாம். மாறாக உடனடியாக நூறுக்கு மேற்பட்ட தொழிற்சாலைகள் மூடப்படுவது தொழிலையும், தொழிலாளர் வாழ்வையும் பாதிக்கும் என இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “விருதுநகர் மாவட்டம், சிவகாசி, மற்றும் அதன் சுற்று வட்ட பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டாசு தொழிற்சாலைகள் செயல்படுகின்றன. பட்டாசு தொழிலை நம்பி நேரிடையாகவும், மறைமுகமாகவும் சுமார் 8 லட்சம் தொழிலாளர்கள் பணியாற்றுகிறார்கள். இந்த தொழிலில் பணியாற்றும் தொழிலாளர்கள் உயிருக்கும், சுற்றுச் சூழலுக்கும் பாதுகாப்பு கொடுக்கின்ற முறையில் விதிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன.