சிஎஸ்கே அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஆயுஷ் மாத்ரே பதற்றமே இல்லாமல் விளையாடுகிறார் என்று அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் பாராட்டு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறியதாவது: ஆயுஷ் மாத்ரே மிகச் சிறப்பாக விளையாடுகிறார். அவரிடம் திறமை இருக்கிறது. மேலும், அவரது பேட்டிங்கில் ஒரு சில்க்கி ஸ்விங் உள்ளது. அதேபோல் ஆக்ரோஷமாகவும் விளையாடக் கூடியவராக உள்ளார். அழுத்தம் உள்ள போட்டிகளில் கூட அவர் பதற்றமின்றி விளையாடுகிறார். அது ஒரு பேட்ஸ்மேனுக்கு முக்கியமாகும்.