புதுடெல்லி: “நாங்கள் பதவியேற்று ஒரு நாள் தான் ஆகிறது. அதற்குள் அவர்கள் எப்படி கேள்வியெழுப்ப முடியும்.” என்று டெல்லி முன்னாள் முதல்வர் அதிஷியின் வாக்குறுதி மீறல் குற்றச்சாட்டுக்கு இன்னாள் முதல்வர் ரேகா குப்தா பதிலடி கொடுத்துள்ளார்.
டெல்லியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த புதிய முதல்வர் ரேகா குப்தா கூறுகையில், “டெல்லியை காங்கிரஸ் கட்சி 15 ஆண்டுகள் ஆண்டது. ஆம் ஆத்மி கட்சி 13 ஆண்டுகள் ஆண்டது. அதில் அவர்கள் என்ன செய்தார்கள் என்று பார்ப்பதற்கு பதிலாக, நாங்கள் பதவியேற்று ஒருநாளில் எங்களை எப்படி அவர்கள் கேள்வி கேட்க முடியும்? பதவிப் பிராமாணம் எடுத்து முடித்த பின்பு முதல் நாளிலேயே நாங்கள் அமைச்சரவை கூட்டத்தைக் கூட்டினோம். ஆம் ஆத்மி கட்சியால் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஆயுஸ்மான் பாரத் திட்டத்தை செயல்படுத்தி உள்ளோம்.