புதுடெல்லி: பயங்கரவாதத்துக்கு எதிராக 'பூஜ்ஜிய சகிப்புத்தன்மை' கொள்கையை இந்தியா பின்பற்றுகிறது என்றும், நட்பு நாடுகள் இதைப் புரிந்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கிறது என்றும் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்துள்ள இங்கிலாந்து வெளியுறவு அமைச்சர் டேவிட் லாம்மி தலைமையிலான குழுவினர், புதுடெல்லியில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரைச் சந்தித்தனர். அப்போது அவர்கள் மத்தியில் பேசிய ஜெய்சங்கர், "காட்டுமிராண்டித்தனமான பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை கடுமையாக கண்டித்ததற்கும், பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் போராட்டத்துக்கு இங்கிலாந்து அளித்த ஆதரவுக்கும் நன்றி.