புதுடெல்லி: “பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பாஜக அரசாங்கம் தான் பொறுப்பேற்க வேண்டும். பயங்கரவாதிகள் அங்கிருந்தவர்களின் மதம் பற்றி கேட்ட பிறகு அவர்களைக் கொன்றதாக பாஜக கூறுகிறது. பயங்கரவாதிகளுக்கு இதற்கெல்லாம் நேரம் இருக்கிறதா என்ன?” என மகாராஷ்டிர காங்கிரஸ் எம்எல்ஏ விஜய் வடேடிவார் விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.
பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது. இந்நிலையில், பாகிஸ்தானுடன் போர் வேண்டாம் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா கூறியதை, பாகிஸ்தான், செய்தி நிறுவனம் ஒன்று தலைப்புச் செய்தியாக வெளியிட்டது. அதாவது, போருக்கு எதிரான குரல்கள் என்று குறிப்பிட்டு சித்தராமையாவின் கருத்தை பாகிஸ்தான் செய்தி நிறுவனம் வெளியிட்டது பெரும் சர்ச்சையானது.