சென்னை: பயணிகளே ரீசார்ஜ் செய்யும் வகையிலான ‘சிங்காரச் சென்னை’ பயண அட்டையை போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் அறிமுகம் செய்தார்.
மாநகர போக்குவரத்துக் கழகத்தின் அனைத்து பேருந்துகளிலும் ‘சிங்காரச் சென்னை’ பயண அட்டை மூலமாகவும் பயணச்சீட்டு வழங்கப்படுகிறது. இத்திட்டத்தை விரிவுபடுத்தும் வகையில் ஏர்டெல் பேமென்ட்ஸ் வங்கி சார்பிலான ‘சிங்கார சென்னை’ பயண அட்டையை தலைமைச் செயலகத்தில் மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் த.பிரபுசங்கர் உள்ளிட்டோர் முன்னிலையில் அமைச்சர் சிவசங்கர் நேற்று அறிமுகம் செய்தார்.