2004-ல் சந்தனக் கடத்தல் வீரப்பனை சுட்டுக் கொன்ற அதிரடிப்படையினரின் சாகசத்தை பாராட்டி, அவர்களுக்கு இரட்டிப்பு பதவி உயர்வுகளைக் கொடுத்தார் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா. கூடவே, 752 அதிரடிப்படை வீரர்களுக்கு அவரவர் மாவட்டங்களில் இலவசமாக வீட்டு மனைகளையும் பரிசாக வழங்கினார்.
அதன்படி, சேலம் மாவட்டத்தில் 40 பேருக்கு பொன்னம்மாபேட்டையில் உள்ள சீலாவரி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் தலா 2 ஆயிரம் சதுர அடி வீதம் வீட்டு மனைகள் ஒதுக்கப்பட்டன. ஆனால், 1991-ல் உருவாக்கப்பட்ட சீலாவரி வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வடிகால் வசதி சரியாக இல்லாததால் அந்த மனைப்பிரிவானது கழிவு நீர் சூழ்ந்தும் குப்பை மேடாகவும் மாறியுள்ளது.