டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் கட்டுக்கட்டாக பணம் இருந்ததாக வெளியான செய்தி நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. அவரது வீட்டில் நடந்த தீவிபத்தின்போது தீயணைக்கச் சென்ற வீரர்கள் பணம் தீயில் எரிந்ததை நேரில் பார்த்து சொன்னதன்பேரில் இந்த சர்ச்சை வெளியுலகிற்கு தெரியவந்துள்ளது.
உடனடியாக உச்ச நீதிமன்றத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி உத்தரவின்பேரில், டெல்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி உபாத்யாயா முதற்கட்ட விசாரணை நடத்தி, இச்சம்பவம் குறித்து ‘ஆழமான விசாரணை தேவை’ என்று அறிக்கை அளித்திருப்பது பல ஊகங்களுக்கு வழிவகுத்துள்ளது.