சென்னை: “பல்வேறு நெருக்கடிகளால் மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கும் நான், கட்சியின் முன்னணி நிர்வாகிகளின் அணுகுமுறைகளாலும் காயப்பட வேண்டியிருக்கிறது” என்று உருக்கமாக கூறியுள்ள விசிக தலைவர் திருமாவளவன், பேட்டி கொடுப்பதை தவிர்க்க வேண்டும் என கட்சியினருக்கு கட்டுப்பாடு விதித்துள்ளார்.
இது குறித்து ஃபேஸ்புக் நேரலையில் அவர் பேசியது: “கட்சி வளர்ச்சியடையும்போது முன்னணி தலைவர்களிடையே முதிர்ச்சி வெளிப்பட வேண்டும். ஆனால், அவர்களோ சமூக வலைதளங்களில் கட்சிக்கும் தலைமைக்கும் களங்கத்தை ஏற்படுத்தும் வகையிலேயே கருத்துகளை பகிர்ந்து கொள்வது வேதனையளிக்கிறது.