சென்னை: பல விதங்களில் மிரட்டித்தான் அதிமுகவை பணிய வைக்கின்றனர் என்று முரசொலி நாளிதழ் தலையங்கம் கூறியுள்ளது. தமிழ்நாட்டில் எப்படியாவது பா.ஜ.க. காலூன்ற நினைக்கிறது என்று முரசொலி நாளிதழ் தலையங்கத்தில் விமர்சனம் செய்துள்ளது. அனைத்துவிதமான அச்சுறுத்தலையும் செய்து அதிமுகவை பா.ஜ.க அடக்கிவிட்டது. சொந்தக் கட்சியிலேயே சிக்கல் வரும் என்பதால் பா.ஜ.க. கூட்டணியை எடப்பாடி பழனிசாமி ஏற்றுக்கொண்டுவிட்டார். மகிழ்ச்சியாகத்தான் கூட்டணி வைத்தோம் என்று எடப்பாடி பழனிசாமி கூறி வருகிறார்.
The post பல விதங்களில் மிரட்டித்தான் அதிமுகவை பணிய வைக்கின்றனர்: முரசொலி நாளிதழ் தலையங்கம் செய்தி appeared first on Dinakaran.