ஆம்பூர்: கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் இருந்து வேலூருக்கு நேற்று இரவு சேலம் கோட்டத்தை சேர்ந்த அரசு பஸ் பயணிகளுடன் வந்தது. பஸ்ஸை டிரைவர் கோவிந்தசாமி ஓட்டினார். கண்டக்டர் தருமன் பணியில் இருந்தார். சுமார் 30க்கும் மேற்பட்ட பயணிகள் பஸ்சில் பயணம் செய்தனர். இந்நிலையில் இன்று அதிகாலை 3.30 மணியளவில் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பஸ் நிலையத்திற்கு வந்தது.
அங்கு பயணிகள் ஏறிய நிலையில் பஸ் மீண்டும் வேலூர் நோக்கி சென்றது. ஆம்பூர் அடுத்த வெங்கிளி அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் தாறுமாறாக சென்று சாலையோரம் உள்ள சுமார் 10 அடி பள்ளத்தில் பாய்ந்தது. ஆனால் பயணிகள் அதிர்ஷ்டவசமாக லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். இதுகுறித்து தகவலறிந்த ஆம்பூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். இதையடுத்து பயணிகள் மாற்று பஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.
The post பள்ளத்தில் பாய்ந்த அரசு பஸ்: வேலூரில் பரபரப்பு appeared first on Dinakaran.