மதுரை: பள்ளிகளில் பாலியல் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் அறிவுரை குழுமங்கள் முறையாக இயங்குவதை உறுதிப்படுத்தக் கோரிய வழக்கில் பள்ளிக் கல்வித்துறை பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தேனி மாவட்டம் ஸ்ரீரெங்காபுரத்தைச் சேர்ந்த சப்னா, உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில்,“தமிழகத்தில் பாலியல் குற்றங்கள், போக்சோ சட்டம் குறித்து பள்ளி மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த மாநில அளவில் பள்ளிக்கல்வி ஆணையர் மற்றும் பள்ளிக் கல்வி இயக்குநர் தலைமையில் காவல்துறையினர், சைபர் குற்ற காவலர்கள், தலா 2 கல்வியாளர்கள், உளவியலாளர்கள் கொண்ட உயர்மட்ட குழு அமைக்கப்பட வேண்டும்.