சென்னை: ‘பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின் எல்லையை ஒட்டிய, சதுப்பு நில தாக்கம் உள்ள 1 கி.மீ சுற்றுப்பகுதிகளுக்குள் எவ்வித அனுமதியும் வழங்கக் கூடாது’ என்று சிஎம்டிஏ உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னை மாநகரில் எஞ்சி இருக்கும் சதுப்பு நிலமாக பள்ளிக்கரணை உள்ளது.
பல்வேறு ஆக்கிரமிப்புகளால் இதன் பரப்பளவு தற்போது 698 எக்டேராக சுருங்கிவிட்டது. வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இப்பகுதி, ஈர நிலப்பகுதி (ராம்சார் தலம்) என அறிவிக்கப்பட்டு, பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த சதுப்பு நிலத்தில் பெரும்பாக்கம் பகுதியில் சாலை அமைக்கப்பட்டது.